Gold chain flush with woman sleeping near Perambalur Try another house robbery !!

பெரம்பலூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட, கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி ஜெயந்தி (வயது 27), இவர் நேற்றிரவு, வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஜெயந்தியின் கழுத்திலிருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

மேலும், குணசேகரன் மகன் பிரபு (வயது 35), என்பவரது வீட்டினுள் இருந்த பீரோவை கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!