Grama Sabha meeting near Perambalur, Rs. 20 lakh frauds; Officers arrested for demanding action against Panchayat Secretary
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுல் பாளையம் கிராமத்தில் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலை திட்டம், கழிவறை கட்டுதல், தொகுப்பு வீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி செயலார் ராஜா என்கின்ற தமிழ்ச்செல்வனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், அடுத்தடுத்து இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கவுள்பாளையம் கிராமத்தில் பரபரப்பு நிலவியது. இதற்கு விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.