Gramma shaba meeting near Perambalur: Collector’s participation!
குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில் கலெக்டர் வே.சாந்தா கலந்து கொண்டார். ஊராட்சி தலைவர் ஆர்.அலமேலு மற்றும் துணைத் தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் உள்பட பல துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது போன்று, பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியக் குழு தலைவர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். இந்த நான்கு ஒன்றியங்களுக்கும் உட்பட்ட 121 ஊராட்களிலும் கிராம சபைக் கூட்டம், அந்தந்த ஊராட்சித் தலைவர்களால் தேசியக் கொடியேற்றத்துடன் நடந்தது.