In Perambalur, She slipped and fallen woman in the home killed by police investigation!
பெரம்பலூர் நகரத்திற்கு உட்பட்ட சாமியப்பா நகரை சேர்ந்தவர் உதயகுமார் மனைவி லதா (45), இவர் நேற்றிரவு 10 மணிக்கு அவரது வீட்டில் அவரே தவறி கீழே விழுந்ததில், அடிபட்டது. அவரை பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனை சென்ற அவர் அங்கு சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.