In the court, copy man and night watchman, masalji job applicants notice to correct the application
பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஒளி நகல் பெருக்குநர் (Xerox Machine Operator), இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி ஆகிய பணிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த விண்ணப்பதரர்கள் தங்களது விண்ணப்பத்தில் உள்ள சரிசெய்யக் கூடிய குறைகளை சரி செய்யும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி, உத்திரவுப்படி 07.05.2018 வழ 09.05.2018 வரை உள்ள வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பதாரர் பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்து தங்களது விண்ணப்பத்தில் உள்ள குறைகளை சரி செய்யும் பொருட்டு இவ்வறிப்பு வெளியிடப்படுகிறது.
குறைகளை சரி செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் பெயர்பட்டியலை பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற இணையதள முகவரி http://ecourts.gov.in/tn/perambalur, வழியாக தெரிந்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.