New Siddha Medicine Unit at Perambalur District Collectorate Complex: Collector Launches!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களும், பெலாதுமக்களும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய சித்த மருத்துவ பிரிவை கலெக்டர் வே. சாந்தா இன்று தொடங்கி வைத்தார்.

இப்புறசிகிச்சை சித்த மருத்துவ பிரிவு வாரத்தில் இரண்டு நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செயல்படும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்புற நோயாளர் சித்த மருத்துவ பிரிவு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்காகவும், பொதுமக்கள் பயனடையும் பொருட்டும் செயல்படும். இங்கு சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்த்துமா நோய், மூட்டுவலிகள், தோல் நோய், சைனஸ் தொந்தரவு, பெண்களின் கருப்பை கட்டி, தைராய்டு பிரச்சனை, சினைப்பை நீர்கட்டி பிரச்சினை, மாதாந்திர தீட்டு பிரச்சினை, பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்கள் மற்றும் பிற நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். இந்த விழாவில் அதிகாரிகள், சித்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!