Old man arrested for molesting school girl near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பள்ளி மாணவிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் சின்னபரவாய் கிராமத்தைச் சேர்ந்த வேலு (வயது 75) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.