On behalf of Perambalur VCK, the death of 9 people including Madurai Melavalavu Panchyat President Murugesan
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மதுரை மாவட்டம், மேலவளவில் ஊராட்சி (தனி) தேர்தலில், முருகேசன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தங்களின் எதிர்ப்பை மீறி, வெற்றி பெற்றதாக கருதிய மாற்றொரு சமூகத்தினர் கடந்த 1997 ம் ஆண்டு ஜுன் 30 நாளன்று பஸ்சில் சென்று கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட 7 பேரை மடக்கி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கும் நடந்து வந்தது. அதில் ராமர் என்பவர் உள்பட 13 பேர் கடந்த 2019 நவம்பர் 16 இன்று விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இறந்து போன ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 9 பேருக்கு இன்று காலை விசிக மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர் இரா.கிட்டு உள்பட பலர் திரளாக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.