On behalf of the BJP in Perambalur, Gandhi emphasized policies and social awareness Rally
பா.ஜ.க சார்பில் இன்று காலை காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள முக்கிய வீதிகளில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை சென்றனர். அப்போது காந்தியின் கொள்கைகளான தூய்மை பேணல், மதுவை தவிர்த்தல், பெண்கள் முன்னேற்றம், மரம் வளர்த்தல், சமூக ஒற்றுமை மேம்படுத்துதல், இயற்கை வேளாண்மையை போற்றுதல், நீர் மேலாண்மை, சுதேசி இயக்கம், சுற்றுச்சூழல் மேம்பாடு, கதர் ஆடை ஊக்குவிப்பு போன்ற நோக்கங்களை வலியுறுத்தி பாதயாத்திரை (பேரணி) நடைபெற்றது. இதில் பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.