On behalf of the Perambalur AIADMK Union, Panchat workers are relief goods
பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, சத்திரமனை, செஞ்சேரி கிராம ஊராட்சிகளை சேர்ந்த 30 தூய்மை பணியாளர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்களான பருப்பு, சமையல் எண்ணெய் , மிளகு சீரகம், முக கவசங்கள் ஆகியவற்றை பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ம. செல்வகுமார் வழங்கினார். அப்போது மாவட்ட கவுன்சிலர் தேவகி வீரமுத்து, ஊராட்சி செயலாளர் நடராஜன், கிளை செயலாளர்கள் பெரியசாமி, செல்லப்பன், சாமுவேல், பிரதிநிதி பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா குமார், ஊராட்சிதுணை தலைவர் செல்லதுரை, செஞ்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமார், கிளை செயலாளர்கள் மணிவேல், ராமஜெயம், தமிழ் வானன், ராஜா, மற்றும் பலர் உடனிருந்தனர்.