Perambalur sitco entrepreneurs – Meeting with bank officials

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொழில் முனைவோர்கள்-வங்கிஅதிகாரிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (மேப்ஸ்) தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். இதில் பாரத ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டலஅலுவலக மேலாளர் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் முனைவோர்கள் பாரத ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதன்அவசியம் குறித்தும், பன்னாட்டு வணிகத்தின்போதும், இ-மார்க்கெட்டிங் வணிகத்தின்போதும், உற்பத்தியாளர்கள் தாமதமின்றி தங்களது பணபரிவர்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கிப்பேசினார்.

நபார்டு உதவிப்பொதுமேலாளர் நவீன்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், மேலாளர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் திருச்சி அதிகாரி கார்த்திக்குமார், நிதிசார் கல்வியியல் ஆலோசகர் ராஜூ ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.

இதில்ஒருங்கிணைப்பாளர் ஜோ.உதயகுமார், சிட்கோ தொழில் கூட்டமைப்பின் (கிளஸ்டர்) இயக்குனர்கள் முருகேசன், சதாசிவம், சந்தானகிருஷ்ணன் உள்பட தொழில்முனைவோர் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!