Rain with thunder and lightning at various places in Perambalur yesterday! The trees are leaning !!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. நாளை ஆடி மாதம் முதல் தேதி தொடங்க உள்ள நிலையில் மழை பெய்தது உழவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், ஆடிப்பட்டம், முதல் தேதியிலேயே விதைப்பிற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியான பருத்தி, மக்காச்சோளம், கம்பு, துவரை உள்ளிட்ட தானிய வகைகளும், சின்ன வெங்காய சாகுபடி செய்யவும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேற்று மாலை பெய்த மழையால், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் – ஊட்டத்தூர் சாலையில் மரம் ஒன்று சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!