Rowdy cut off at Perambalur Police are investigating !!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் கே.கே நகர் பகுதியை சேர்ந்த நராயணன் மகன் கபிலன் (வயது சுமார் 27). இவர் மீது பல்வேறு வழக்குகள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் உள்ள நிலையில், இன்று மாலை, துறைமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கபிலனை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்ததுடன் வழக்குப் பதிவு செய்து கபிலனை கழுத்தறுத்த மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!