Saloon Shop worker commits suicide in Perambalur
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ஆத்தூர் சாலை பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த பெரம்பலூர் ஜமாலியா நகரை சேர்ந்த நடராஜ் (வயது 68), என்பவர் அவரது கடையில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முதியவர் நடராஜுயின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில்,
நடராஜனுக்கு குடிப் பழக்கம் இருந்ததாகவும் இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் நடராஜனால் குடிக்காமல் இருக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.