Sand lorry Driver arrested in Perambalur for without permission

பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நான்கு ரோடு மின்வாரிய அலுவலம் அருகே கும்பகோணத்திலிருந்து பெரம்பலூருக்கு எவ்விதமான அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக சுமார் 80,000 மதிப்புள்ள 8 யூனிட் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் ஆய்வு செய்து , சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்த ஓட்டுநர் தங்கவேல் மகன் மருதுபாண்டியன் (வயது 43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும் தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!