Sri Ferility Center inauguration at Perambalur: Actress Mahima Nambiar Lighting with Opening Today
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள புகழ்பெற்ற எம்.டி.ஆர் மருத்துவமனை வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கருத்தரித்தல் மைய திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவிற்கு டாக்டர் தங்கராஜ், ரூபிராஜேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். டாக்டர்கள் கிருபாகரன், ஸ்ரீதேவிகிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடிகை மஹிமா நம்பியார் குத்துவிளக்கு ஏற்றி ஸ்ரீ கருத்தரித்தல் மையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பார்க்கவ குல சங்க மாநில தலைவர் பாண்டுரெங்கன், ரோவர் கல்வி நிறுவன மேலாண் தலைவர் வரதராஜன், திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், 007 கி.முகுந்தன், முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மோகன்ராஜ், அன்னை பருதம்மா மெட்ரிக் பள்ளி தாளாளர் பருதம்மா, பாரத் கார்த்திக், வசுந்தரா ஜெய்பிரகாஷ், விஷால் சரவணன், அரணாரை கார்த்திகேயன், கல்யாணி மெஸ் சுரேஷ், வக்கீல் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலகல்கண்டார்கோட்டை முன்னாள் தலைவர் சண்முகம், டி.கே.ஸ். மெடிக்கல் செந்தில்நாதன், புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.