Tamil Nadu Maruthuva Nala sangam protest in Perambalur protesting against the minister

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை தமிழ்நாடு மருத்துவ நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிங்காரம் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், கடலூரில் நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், அச்சங்கத்தை சேர்ந்த சமுதாயத்தினரை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சலூன் கடைக்கார்கள், சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!