TET Exam in Perambalur district: 6531 Candidates wrote: Collector review !!

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்ததாவது:

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -2, இன்று நடைபெற்றது. தேர்வு தாள் -2 ஐ பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 மையங்களில் 6531 நபர்கள் தேர் எழுதி உள்ளனர். 745 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது, மேலும், தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்ல தடைசெய்யப்பட்டது. என தெரிவித்தார்.

அப்போது, முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கன், வட்டாட்சியர் பாரதிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!