The jewel thief who has been arrested for falsely reporting in Perambalur
பெரம்பலூர் மாவட்டம் சித்தளி கிராமம் காலணி தெருவை சேர்ந்த வீரன் மகன் சின்னசாமி (வயது 38) இவர் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு எதிரே பாஸ்ட்புட் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். தனது வீட்டை மாற்றுவதற்காக பெரம்பலூர், துறைமங்கலத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவரது லோடு ஆட்டோவில் சாமான்களை எடுத்து சென்று மாற்றி வைத்துள்ளார். இதில், நகைகள் வைத்திருந்த பை காணவில்லை, அதை ஜெயராமன் எடுத்திருக்காலாம் என சின்னசாமி கொடுத்து புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், சின்னசாமி வீட்டிலேயே நகை இருந்த பை தேடியதில் கிடைத்தது. இதில் பொய் புகார் கொடுத்த சின்னசாமி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.