The poultry vaccine camp of Animal Husbandry Department in Perambalur district

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆண்டு தோறும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இந்த ஆண்டு 09.02.2018 முதல் 22.02.2018 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, அனைத்து கோழி வளர்ப்போர், பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம், என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!