The public who caught the wire steel rods youth and handed over to the Perambalur police!


பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பொறியாளர் கருணாமூர்த்தி (வயது 70), இவருக்கு சொந்தமான இடத்தில் பணி நடந்து கொண்டிருக்கும் கட்டிடத்தில் இருந்து வாலிபர் ஒருவர் இரும்பு கம்பிகளை திருடி செல்வதை அறிந்த அப்பகுதி மக்கள், கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின்னாக தகவல் அளித்தான். இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தியதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சிலோன் காலனியை சேர்ந்த ஜீவானந்தம் (வயது 30) என்பதும், பெரம்பலூர் பகுதியில் கட்டிட பணி செய்ததும் தெரிய வந்நது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் வினிதா வழக்குப் பதிவு மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!