The Tractor and Two Wheeler Clashes. Worker Killed Near in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் மகன் பெரியசாமி (வயது 48), விவசாய கூலித் தொழிலாளி. நேற்றிரவு அம்மாபாளைத்தில் இருந்து லாடபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் எதிரே லாடபுரத்தில் இருந்து வெங்காய சருகுகளை ஏற்றி வந்த டிராக்டர் லாரி பெரியசாமி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெரியசாமியை மீட்டு அருகே அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தர். இது தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!