The wind breaks EB Posts at Perambalur Discharge electricity for 3 days
பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் சோமண்டாபுதூர் காட்டுக்கொட்டகை பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் 10க்கும் மின் கம்பங்கள் ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்து சேதமடைந்தது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் மின்தடையால் வயல் பகுதியில் வசிக்கும் கால்நடைகள், விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மின்வாரியம் விரைவில் சீரமைத்து கொடுத்து மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.