With the financial assistance of the wedding, Thaali is planning to offer gold

ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் : 300 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பில் ஆட்சியர் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் தமிழக அரசின் சிறப்புத்திட்டங்களுள் ஒன்றான ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வி முடித்த 150 பயனாளிகளுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.25,000- மதிப்பிலான நிதியுதவியும், கல்லூரிப் படிப்பு முடித்த 150 நபர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.50,000- மதிப்பிலான நிதியுதவியும் என மொத்தம் 300 பயனாளிகளுக்கு ரூ.64,80,000- மதிப்பிலான 2,400 கிராம் தங்கமும், ரூ.1,12,50,000- மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று பயனாளிகளுக்கு வழங்கினார்.
அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497