Yesterday’s 2 Wheelers Collied the accident, death toll rises to 2! near in Perambalur

பெரம்பலூர் அருகே நேற்று மதியம் நடந்த விபத்தில், 2 டூவீலர்கள் நேர்க்கு நேர் மோதிக் கொண்டதில், 10 வகுப்பு பயின்று வந்த மாணவி சமீரா (வயது 16), சிகிச்சைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இவருடன் உடன் வந்த சமீர் (வயது 13), மற்றும் எதிர் வாகனத்தில் வந்த அருணாச்சலம் மகன் அண்ணாமலை (40) என்பவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இதனால், அந்த விபத்து சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. மேலும், சிறுவன் சமீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!