Youth arrested for raping teenage girl in perambalur.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கோழியூர் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது இளம்பெண்ணை ஒருவர், அதே ஊரை சேர்ந்த பாபு மகன் சந்தோஷ்குமார் (வயது 21) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், கடந்த பிப். 15 அன்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய போது அவரை கற்பழித்து விட்டதாகவும் இதனை வெளியில் சொன்னால் தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதால் இளம்பெண்ணான அவர் அதனை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஒரு மாதம் கடந்தும், மாதவிலக்கு ஏற்படாததால் தனது அப்பா அம்மாவிடம் கூறியதாகவும், அவர்கள் அப்பெண்ணை அழைத்து சென்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், மெடிக்கல் கல்லூரியில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பெரம்பலூர் போலீசார், அந்த மருத்துவமனைக்கு சென்று இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சந்தோஷ்குமாரை கைது செய்த பெரம்பலூர் காவல் ஆய்வாளர் நித்யா இது குறித்து மேலும் தீவிர நடத்தி விசாரணை செய்து வருகிறார்.