kabadi

பெரம்பலூர் : கிருஷ்ணகிரியில் வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் மாநில அளவிலான சிறுமியர் சாம்பியன் கபாடி போட்டியில் கலந்து கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் அணி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 50-பள்ளியிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில அமைச்சூர் கபாடி அமைப்பு சார்பில் வரும் 19,20,21 -ஆகிய தேதிகளில் மாநில அளவிலான 16-வயதுக்குட்பட்ட சிறுமியர்களுக்கானசாம்பியன் கபாடிப்போட்டி நடக்கவுள்ளது.

இதில் மாநிலத்தில் 32-மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து பங்கேற்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்ளும் வீராங்கனைத் தேர்வு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதாத்தில் நடைப்பெற்று வருகின்றது.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!