4 pound gold coin at locked house near Perambalur, Rs. 2 thousand cash theft!

பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி ரேவதி (வயது 29), விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மாமியர் மருதாம்பாள் (50), மகன்கள் ரக்‌ஷன்(7), ஹிருத்திக் ரோசன்(5), ஆகியோர் நேற்றிரவு கீழ் வீட்டை பூட்டி விட்டு, மாடிக்கு தூங்க சென்றார். இன்று காலை சுமார் 4 மணிக்கு மருதாம்பாள் பால் கறக்க வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது அறிந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது மோதிரங்கள் 3, செயின், மாட்டல், தாலிக்காசு, மற்றும் ரொக்கம் ரூ. 2ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!