Corona for 21 more in Perambalur today: escalating infection! Informing people to act with safety !!
பெரம்பலூரில் காவலர்கள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா என்னும் கோவிட்-19 என்னும் வைரஸ் தொற்று இன்று 21 பேருக்கு பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன் பாதுகாப்பாக இருந்து தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த உதவுமாறு சுகாதார துறை சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எறையூர், களரம்பட்டி, நெய்க்குப்பை, பாடாலூர், குரும்பலூர், பெரம்பலூர், துறைமங்கலம், மேலப்புலியூர், விஜயகோபாலபுரம், அல்லிநகரம், பூலாம்பாடி ஆகிய பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை சுகாதாரத்துறை , நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.