Perambalur: Notice of power cut at Pudukurichi substation!
சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின்நிலையத்தில் வரும் ஜுன்.11- ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், திருவிளக்குறிச்சி, தெரணி, தெரணிப்பாளையம், நல்லூர், இரூர், கூத்தனூர் ஆலத்தூர், காரை, புதுக்குறிச்சி, கொளக்காநத்தம், அணைபாடி, அயினாபுரம், வரகுப்பாடி, அயிலூர் குடிக்காடு, சிறுகன்பூர், சாத்தனூர், எஸ்.குடிக்காடு ஆகிய கிராமங்களுக்கு அன்றைய தினம் காலை 9 மணி முதல் பணி நிறைவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்த உடன் மின் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.