15-year-old boy killed in Perambalur! Police investigation!!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்காயி கோயில் 15 வயது மதிக்கதக்க சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ரோஹித் (15). படிப்பை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் இன்று மாலை ரோகித் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.