ADMK opens Thanner Pandal near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றிய அதிமுக சார்பில் வி.களத்தூரில், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த கோடை தண்ணீர் பந்தலை, பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.எவுமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்எ பூவை. செழியன் ஆகியோர் முன்னிலையில், அமைப்பு செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அ. அருணாசலம் திறந்து வைத்தார். பின்னர், அங்கிருந்த கட்சியினருக்கும். பொது மக்களுக்கும், நீர் மோர், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் , எலுமிச்சை சாறு ஆகியவற்றை வழங்கினார்.

வேப்பூர் ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஒன்றிய இணை செயலாளர் கலாவதி கண்ணபிரான், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, காவியா ரவி, தேவையூர் ஊராட்சித் தலைவர் அம்சவள்ளி நடராஜன், அனுக்கூர் செங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!