Apply for Best Transgender Award; Perambalur Collector Information!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூபாய் 1,00,000 ( ஒரு லட்சம் மட்டும் ) காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். மேலும் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும். மேலும் விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

இந்த விருது பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள், https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 26.12.2023 முதல் 31.01.2024 வரை விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 31.01.2024 மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். விருது பெற தகுதியுள்ளவர்கள் இதற்கான தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தின் 04328-296209 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!