as far as the address in perambalur; 9 pounds jewelry flush with the woman

கற்பனை காட்சி

பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் பெண் ஒருவரிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.பெரம்பலூர் நான்குரோடு மின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லதா(வயது 51) . நேற்றிரவு 9 மணியளவில் குப்பை கொட்டுவதற்கான வீட்டை விட்டுவெளியே வந்த லதாவிடம் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் முகவரி கூறி அந்த வீடு எங்குள்ளது என கேட்டுள்ளனர். அப்போது திடிரென லதா அணிந்திருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பி தலைமறைவாகிவிட்டனர். திருடு போன நகையின் மதிப்பு ரூ. 2 லட்சம் என கூறப்படுகிறது இது குறித்து ராஜேந்திரன் கொடுத்தபுகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து நகையை பறிந்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!