Burglary in an unlocked house near Perambalur; Police investigation!
பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் குணசேகரன். கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீட்டை கதவு இருந்தும் பூட்டுப் போடாமல்,கதவை சாத்தி வைத்து விட்டு, வேலைககளை கவனித்து வந்த நிலையில், இன்று அதிகாலை சாத்தப்பட்டு இருந்து கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் சென்று பார்த்த போது, வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த
ஒரு பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, 30 ஆயிரம் ரொக்கப் பணம்ஆகியவை திருடு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து, தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு, மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்களை வைத்து, அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.