Chennai woman arrested for fraud of Rs. 2 crores 30 lakhs in Perambalur district Public

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்த பவித்ரா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற போலியாக நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக சென்னை கொரட்டூரை சேர்ந்த ஆர்ச்சுடு பிரின்ஸ் அப்பார்ட்மண்டை சேர்ந்த இளங்கோவன் மகன் சந்தோஷ்குமார் (37), சிவசங்கரி (35), பெரம்பலூர் மாவட்டம் பெண்ணகோணத்தை சேர்ந்த சரத்குமார் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், டி.எஸ்.பி தங்கவேல் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட கும்பலை தீவிர தேடிவந்தனர்.

அக்கும்பல், பவித்ரா மட்டுமில்லாமல், மேலும் சிலரிடம் பணத்தை ஏமாற்றியது விசாரணையில், அது மொத்தம் ரூ. 2 கோடியே 30 லட்சம் என தெரியவந்தது. சென்னை சென்ற போலீசார், மோசடி நபர்களில் ஒருவரான சென்னை மாங்காட்டை சேர்ந்த சிவசங்கரியை அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர். அவரை கைது செய்து இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!