Chief Minister’s Two Girl Child Protection Scheme; To apply for the benefit; Perambalur Collector Information!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த 441 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை ரூ.1,49,78,112/- (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்தி ஒன்பது இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து நூற்றி பணிரெண்டு) முதிர்வு தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்துள்ள 18 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் பெரம்பலூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தங்களது வைப்புத்தொகை பத்திரம், பெண்குழந்தையின் பத்தாம் வகுப்பு சான்றிதழ், வங்கிகணக்கு புத்தகம், தாய் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றுடன் வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியநாட்களில் மாவட்டசமூக நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!