Construction of a new flyover near Perambalur at an estimated cost of Rs. 1 crore 60 lakhs: Minister Sivasankar has started.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம் கிராமத்தில் இருந்து சிறுகன்பூர் வரை செல்லும் சாலையில், ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

ஆலத்தூர் ஒன்றிய சேர்மனும், ஒன்றிய செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் கே.எம்.ஏ. சுந்தரராஜ் , ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வ.சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொளக்ககநத்தம் ந. ராகவன், தெரணி வெ. ரமேஷ், அயினாபுரம் பாலமுருகன், கவுன்சிலர் கொட்டரை இளவரசு மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!