Employment in Perambalur; Cleanliness staff work in the branch jail!

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்திய சிறையில் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் கிளைச்சிறையில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் (Cleanliness Worker) ஒரு பணியிடத்திற்கு எழுத படிக்க தெரிந்தவர்கள் 01.01.2024 அன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். SCA/ SC/ ST பிரிவினர்கள் 37 வயதுக்கு உட்பட்ட, MBC/BC பிரிவினர்கள் 34 வயதுக்குட்பட்ட, OC பிரிவினர்கள் 32 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் (GT- General non priority – 1 நபர்) தெரிவு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது. தூய்மை பணியாளர் பதவி ஊதிய விகிதம் Level -1 (15,700 – 58,100) – ரூ.15,700/- ஆகும்.

மேற்படி, தூய்மை பணியாளர் பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை ( Resume) 28.03.2024க்குள் திருச்சி மத்திய சிறை சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்க பெறும் வகையில் அனுப்ப வேண்டும் என திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!