Grievance ombudsman appointed to report grievances and complaints about NREGA Scheme: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்தவதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை செயல்படுத்துவது தொடடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்திட்டம் செயல்படுத்தப்படுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் பெரம்பலுார் மாவட்டத்தின் குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஜானகிராமன் என்பவரை 8925811319 என்ற அலைபேசி எண்ணிலும், ombudsnregsperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!