In Perambalur, a certificate ceremony was held for those who completed the training of food vendors by HOPE Trust with the help of NABARD Bank!

மத்திய அரசின் நபார்டு வங்கி உதவியுடன், ஹோப் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்ற உணவு விற்பனை ஊக்குவிப்பாளர் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஹோப் ட்ரஸ்ட் வளாகத்தில் நாபர்டு வங்கியின் டி.ஜி.எம் சோமசுந்தரம் தலைமையில் நடந்தது. அப்போது, தொழில் முனைவோர் ஆவதற்கான தகுதிகளை எவ்வாறு வளர்த்து கொள்வது குறித்து பயிற்சி பெற்றவர்களிடம் எடுத்துரைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், வங்கி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.பிரபாகரன், நபார்டு வங்கி ஏ.ஜி.எம் பிரபாகரன், மற்றும் ஹோப் ட்ரஸ்ட் திட்ட இயக்குனர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பயிற்சி நிறைவு செய்தவர்கள், ஹோப் ட்ரஸ்ட பயிற்சியாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!