In Perambalur, a woman who had bought vegetables came on a motorcycle and snatched a gold chain; Police investigation !!

கற்பனை காட்சி

பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள குளோபல் நகரைச் சேர்ந்த ரெங்கராஜ் மனைவி சகுந்தலா (வயது 65), இன்று காலை சுமார் 9 மணியளவில், கடையில் இருந்து தனது வீட்டிற்கு காய் வாங்கி நடந்து வந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால், வந்து சகுந்தலா அணிந்திருந்தா 2 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில், கழுத்திலும், வலது முழங்கையில் சிறு காயங்கள் ஏற்பட்டது. பின்னர், அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!