In Perambalur, an awareness rally on the occasion of World Anti-Drug Day!
உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை இன்று காலை போலீஸ் எஸ்.பி ஷ்யமளாதேவி கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்தப்படம். மாணவர்கள், காவல் துறையினர், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு பாலக்கரையில் தொடங்கி சங்கு, கடைவீதி வழியாக வானொலித் திடல் வரை முழக்கமிட்டவாறு சென்றனர்.