In Perambalur, an old man who tried to cross the road was hit by a car and died!

பெரம்பலூர் துறைமங்கலம், அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி இன்று காலை 10 மணி அளவில் துறைமங்கலத்தில் செல்லும் திருச்சி – சென்னை தேசியநெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, மத்தியபிரதேசத்தில் இருந்து ரமேஸ்வரத்திற்கு சென்ற கார் கந்தசாமி மீது, மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த கந்தசாமியின் உடலை கைப்பற்றி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் காரை ஓட்டி வந்த, மத்திய பிரதேசம், தார் மாவட்டம், பத்னாவரை சேர்ந்த, முரளிதாஸ் மகன் லக்கன்தாஸ் யோகியிடம் து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!