In Perambalur, the missing youth was rescued in a rotten state!

பெரம்பலூர் அரணாரை ஏரியில் அழுகிய நிலையில் சடலம் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதாக, கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நடத்திய விசாரணையில், காணமல் போனதாக புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த அரணாரையை சேர்ந்த ஜோதிவேல் மகன் மதியழகன் என்பதை உறுதி செய்தனர்.

இறந்து போன மதியழகன் டிப்ளமோ ஆட்டோ மொபைல்ஸ் படித்து முடித்துவிட்டு தனியார் கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 11.03.23 ந் தேதி இரவு 9 மணியளவில் மதியழகன் குடித்து விட்டு அவரது வீட்டிற்கு மது போதையில் வந்துள்ளார். இதனை அவரது தந்தை ஜோதிவேல் கண்டித்துள்ளார்.

இதில் கோபித்துக் கொண்ட மதியழகன், தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பாததால், அவரது அண்ணன் மாரியப்பன் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அரணாரை ஏரியின் மேற்கு திசையில் வேப்ப மரத்தில் பேனரை கயிறு போல் கிழித்து தூக்கு மாட்டி மேற்கண்ட மதியழகன் இறந்து அழுகிய நிலையில் தொங்கி கொண்டிருப்பது அவரது உறவினர்கள் மூலம் உறுதி செய்து, உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!