In Perambalur, the person who went to worship Sami in his hometown festival stole money from his house!
பெரம்பலூர் அன்னை இந்திரா நகரில் வசித்து வரும் குணசேகரன் மகன் கிஷேர்குமார் (32), நேற்று காலை தனது சொந்த ஊரான வடக்கலூர் கிராமத்தில் நடந்த தேர்திருவிழாவிற்கு சென்று விட்டு, இன்று காலை வந்து பார்த்த போது, முன்பக்க கதவு பின்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது, பின்பக்கத்தில் உள்ள கதவு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 15 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு, மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன், கொள்ளைகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.