In Perambalur, TRB Exam for Graduate Teacher and District Resource Center Teacher: Collector In Person Inspection!
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியருக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் டோம்னிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இந்த தேர்வு நடந்தது.
அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மொத்தம் 559 நபர்கள் விண்ணப்பித்ததில் 545 நபர்கள் தேர்வெழுதினர். 14 பேர் தேர்வெழுத வரவில்லை. கல்வி மற்றும் வருவாய் துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.