In the case of the seahorse, the Forest Department was in the court with the magician’s love affair

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவகத்தின் பின்புறம், வீடு ஒன்றில் இளம்பெண்ணின் சடலத்தை வைத்து பூஜைகள் செய்த மந்திரவாதி கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து சிலைகள் உள்ளிட்ட மந்திர பூஜை பொருட்கள் கைப்பற்றப்பட்டது, அதில் அரிய வகை உயிரினமும், தடை செய்யப்பட்டதுமான கடற்குதிரைகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளை வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து வரும் மந்திரவாதி கார்த்திகேயன், மந்திரவாதியின் காதல் மனைவி தீபிகா என்கிற நசீமா ஆகிய இருவரையும் வனத்துறையினர் பி.டி வாரண்ட் பெற்று சிறையில் இருப்பவர்களை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மே.5 வரை காவல் நீட்டிப்பு செய்து உத்திரவிட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!