Near Perambalur, a woman was threatened with a knife, her cell phone stolen, gold jewelry stolen!

கற்பனை காட்சி
பெரம்பலூர் அருகே புதுநடுவலூரை சேர்ந்தவர் சுதா (34) சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் டைட்டீசியனாக பணி புரிந்து வருகிறார். இன்று மாலை பணி முடித்து தனக்கு ஸ்கூட்டியில் சிறுவாச்சூர் – புதுவேலூர் சாலையில் செல்லும் பொழுது, அடையாளம் தெரியாத 2 பேர் பைக்கில் வந்து சுதாவின் வாகனத்தை மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினையும், 1 1/2 பவுன் செயினையும், செல்போனையும் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.