Perambalur CITU Rural Department Employees Association road blockade!
சிஐடியூ ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில், நகராட்சி, பேரூராட்சி நிரந்தர பணிகளை ஒழித்து தனியார் கைகளில் தாரை வார்க்கும் அரசாணை எண் 139 – ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும், ஊதியத்தில் பிடித்தம் செய்த EPF தொகையை கணக்கில் செலுத்த வேண்டும், கலெக்டரால் நியமிக்கப்பட்ட தினக்கூலி 580/- தர வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூபு புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் செய்தவர்களை பெரம்பலூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 70 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.